ஃபுளோரிடா: அமெரிக்காவில் விசாரணைக்கு ஆளான பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர் மரணமடைவதற்கு காரணமான பெண் நீதிபதியை ஒய்வு பெறும் வரை இனி பணிக்கு வர வேண்டாம் என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்காக கடந்த வாரத்தில் 59 வயதான சாண்ட்ரா ஃபாயி டுவிக்ஸ் நடக்க முடியாத சூழ்நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு ஆஜர் ஆனார். ஏற்கனவே ஆஸ்துமா நோயாளியான அவருக்கு விசாரணையின் போது மூச்சு இளைப்பு அதிகமானதால் மருத்துவ உதவி கோரினார்.