மணிப்பூர்: மேகாலயாவில் அருணாச்சலப்பிரதேசத்தை போல மணிப்பூர் மாநிலத்திலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை முழுமையாக நீக்க மத்திய அரசு கோரிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து 14 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய இரோம் ஷர்மிளா மத்திய அரசு நடவடிக்கையை வரவேற்றுள்ளார். மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தை போல மணிப்பூர் மாநிலத்திலும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது அவரின் கோரிக்கை ஆகும்.