வாலிபரிடம் செயின் பறிப்பு

பெரம்பூர்: பெரவள்ளூர் சாந்தி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (38), நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் உள்ள ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர், சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், கத்தியை காட்டி மிரட்டி, சதீஷ்குமார் கழுத்தில் கிடந்த 3.5 சவரன் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், புளியந்தோப்பு போலீசார், தப்பிய இருவரை தேடினர். இதனிடையே, பெரம்பூர் பேரக்ஸ் சாலை மணிக்கூண்டு அருகே சென்ற அந்த 2 பேர், அங்கிருந்த போலீசாரை பார்த்ததும் பைக்கை திருப்ப முயன்றதால் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது, பைக்கை போட்டுவிட்டு இருவரும் தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். …

The post வாலிபரிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: