பொழியும் குண்டுமழை!: உக்ரைனில் ஒரே இடத்தில் கொத்து கொத்தாக புதைக்கப்படும் மனித உடல்கள்..!!

உக்ரைனில் 16வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என பலரும் பலியாகி வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் தரைமட்டமாகிவிட்டன. மரியுபோல் நகரில் உயிரிழந்தவர்களின் உடலை வாகனங்களில் கொண்டு வந்து ஒரே இடத்தில் புதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. போர் தொடர்வதால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் உக்ரைன் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

The post பொழியும் குண்டுமழை!: உக்ரைனில் ஒரே இடத்தில் கொத்து கொத்தாக புதைக்கப்படும் மனித உடல்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: