ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு.. அஞ்சலி செலுத்தும்போது கதறி கதறி அழுத பெண்கள்..!!

விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு, ஐ.நா பாதுகாப்பு அவை உறுப்பினர்களும், ஈரான், ஈராக்கில் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு, ஐ.நா பாதுகாப்பு அவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். ஈராக்கில், பாக்தாத் நகரில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு, அதிபர் ரைசி, அமைச்சர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் முன்பு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர். தூதரகத்தில் அரை கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் கூடினர். அதிபர் ரைசியின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அஞ்சலி செலுத்திய போது, பெண்கள் கதறி அழுது கண்ணீர் வடித்தனர். டப்ரிஸ் நகரில் பொதுமக்களுடன் ராணுவ வீர‌ர்களும் வீதியில் நின்று, உயிரிழந்த அதிபர் ரைசிக்கு அஞ்சலி செலுத்தினர்.

The post ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு.. அஞ்சலி செலுத்தும்போது கதறி கதறி அழுத பெண்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: