2 விண்வெளி சோதனை செயற்கைகோள்களை விண்ணில் ஏவிய சீனா..!

சீனா 2 விண்வெளி சோதனை செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் ஷியான்-20ஏ மற்றும் ஷியான்-20பி என்ற 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும், இது லாங் மார்ச் சீரிஸ் ராக்கெட்டுகளின் 454-வது திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2 விண்வெளி சோதனை செயற்கைகோள்களை விண்ணில் ஏவிய சீனா..! appeared first on Dinakaran.

Related Stories: