ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் கொள்ளை: 3 பேர் கைது

துரைப்பாக்கம்: முட்டுக்காடு சோதனைச்சாவடியில், தனிப்படை போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக,  வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், இருந்த 3 பேரிடம் 60 போலி ஏடிஎம் கார்டுகள், 5 ஸ்கிம்மர் கருவிகள், 9 மொபைல்கள், 2 லேப்டாப் ஆகியவை இருந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருச்சி லாவா சந்தன்(32), பிரவீன் கிஷோர்(30) திண்டுக்கல் சிக்கந்தர் பாதுஷா(37) ஆகியோர் ஏடிஎம் கார்டுகளை ஸ்கிம்மர் கருவி மூலம் ஸ்கேன் செய்து, அதன் மூலம் பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது. மேலும், பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து, முக்கிய குற்றவாளியான லாவா சந்தனை தேடுகின்றனர்….

The post ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் கொள்ளை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: