மாண்டஸ் புயல் தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: மாண்டஸ் புயலால் சென்னையில் மட்டும் 400 மரங்களும், பிற மாவட்டங்களை சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மாண்டஸ் புயலால் விழுந்துள்ளன. இப்படி சரிந்து விழுந்த மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்று அதே இடத்தில் நடும் பணியை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதே போன்று சென்னை காசிமேடு உள்பட பல கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும். மாண்டஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 5 போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பல சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்துள்ளது. இந்த சிக்னல்கள், சிசிடிவி கேமராக்களை சீரமைக்கும் பணியை காவல்துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதே போன்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணத்தை காலதாமதமின்றி விரைந்து வழங்க வேண்டும்….

The post மாண்டஸ் புயல் தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: