உலகத்தின் மிகப்பெரிய திரைப்பட விழாவான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து படங்கள் அனுப்பப்படும். இந்த முறை மலையாளத்தில் வெளிவந்த ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தப்பி ஓடிய ஒரு அடிமாட்டை ஊர்மக்கள் சேர்ந்து பிடிப்பதுதான் படத்தின் கதை.