மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்

மும்பை: மலையாளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற படம், ‘காதல்: தி கோர்’. இதில் தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் நடித்த மம்மூட்டியே இப்படத்தையும் தயாரித்திருந்தார். அப்படத்தை பார்த்து வியந்த பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன், ‘காதல்: தி கோர்’ படத்தில் மம்மூட்டி நடித்த கேரக்டரில் பாலிவுட் ‘கான்’ நடிகர்கள் நடிப்பார்கள் என்று தனக்கு தோன்றவில்லை என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி: கேரளாவில் கல்வியறிவு அதிகம் கொண்ட பார்வையாளர்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சமூகத்தை பிரதிபலிக்கும் விஷயங்களைச் செய்வது அங்கு எளிதாக இருக்கலாம். தென்னிந்திய ரசிகர்கள், ஆண் சூப்பர் ஸ்டார்களை கொண்டாடுகின்றனர். அப்படி இருக்கும்போது, மம்மூட்டி மேற்கொண்ட முன்னெடுப்பு பாராட்டத்தக்கது.

‘காதல்: தி கோர்’ படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி, படத்தை அவரே தயாரித்துள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஆதரவோ, அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையோ சமூகத்தில் பரவலாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதுபோல், ‘காதல்: தி கோர்’ போன்ற ஒரு படத்தில் பாலிவுட் ‘கான்’ நடிகர்கள் நடிப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. அதேவேளையில், இன்றைய தலைமுறையினர் அக்கருத்தை உடைப்பார்கள் என நம்புகிறேன். உதாரணமாக, ‘ஷுப் மங்கள் ஜியாதா சாவ்தான்’ படத்தில் ஆயுஷ்மான் குரானா தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.

The post மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: