மலையாள நடிகை சனுஷா, தமிழில் காசி, அரண், பீமா, ரேனிகுண்டா, நாளை நமதே, நந்தி, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தற்கொலைக்கு முயன்றதாக ஒரு அதிர்ச்சி தகவலை சொல்லி இருக்கிறார். அவர் கூறியதாவது: கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, என் வாழ்க்கையிலும் மற்றும் திரைத்துறை தொடர்பாகவும் சிரமங்கள் ஏற்பட்டது. என் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயம் வந்தது. இதனால் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு, தூக்கம் வராமல் தவித்தேன். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்து தவித்த நான், ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசித்தேன்.