×

பலாத்காரம் செய்த காதல் கணவர் நடிகை பூனம் பாண்டே புகார்: திருமணமாகி 13 நாட்களில் பரபரப்பு

திருமணமாகி 13 நாளில் தனது கணவன் மீது நடிகை பலாத்கார புகார் கூறினார். இதையடுத்து காதல் கணவர் கைது செய்யப்பட்டார். பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் சாம் பாம்வே என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். படுக்கையறையில் சாம் பாம்வே உடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ, போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பூனம் பாண்டே ஷேர் செய்து வந்தார். திருமணத்திற்கு முன்பே தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது. ெதாடர்ந்து கடந்த செப்டம்பர் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 16ம் தேதி பூனம் பாண்டேவும், அவரது கணவரும் கோவாவுக்கு ஹனிமூன் புறப்பட்டனர். இவர்களின் நெருக்கமான ஹனிமூன் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். கொரோனா விதிகளை மீறியதாக இவர்கள் மீது புகாரும் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கணவரான சாம் பாம்பே, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கோவா போலீசில் நடிகை பூனம் பாண்டே புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர்.

Tags : Poonam Pandey ,
× RELATED இறந்துவிட்டதாக நாடகமாடிய நடிகையிடம்...