மதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தியுள்ளார் நடிகர் சூரி. காமெடி நடிகர் சூரி, கொரோனா பாதிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் மதுரையில் உள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவர்களுடன் அவர் ஆன்லைனில் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு சில பாடங்களை எடுத்தார். தன்னம்பிக்கை தொடர்பான பாடமும் கற்பிக்கும் விதமாக தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர் எடுத்து கூறினார். சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், சினிமாவுக்கு வரும் முன் பட்ட வேதனைகள், அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றது எப்படி என்பதை பற்றியெல்லாம் அவர் இந்த வீடியோ காலில் பேசினார். மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து பேசினார்.