தர்பார் அரசியல் படமா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம், தர்பார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது: ரஜினி போலீஸ் வேடத்தில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் அவரை போலீஸ் கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும். 1980களில் பார்த்த ரஜினியை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

அதேவேளையில் கதையும், காட்சியும் புதிதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கப்பட்டதுதான், தர்பார். இது மும்பையை கதைக்களமாக கொண்டது. ரஜினி சிட்டி கமிஷனராக நடிக்கிறார். மிகப் பெரிய சிட்டியில் ஒரு போலீஸ் அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் கதை. இது ரஜினியின் அரசியல் நுழைவுக்காக உருவான படம் அல்ல.

படமும் அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. கடைசி நாளில் நயன்தாரா படப்பிடிப்புக்கு வராதது பற்றி கேட்கிறார்கள். எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தவர் அவர். பெண்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவரைப் பற்றி நான் ஏதாவது சொல்லி, அவரது இமேஜுக்கு பாதிப்பு ஏற்படுத்த விரும்பவில்லை.

Related Stories: