ஜெயம் ரவி ஜோடியாகும் டாப்ஸி, டயானா

கோமாளி படத்துக்கு பிறகு அஹமத் இயக்கும் ஜன கண மன படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஸ்பை திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் துருக்கியில் நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி, டயானா எரப்பா நடிக்கிறார்கள். பாலிவுட் சென்ற பிறகு இந்தி படங்களில் பிசியாகிவிட்ட டாப்ஸி, தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தார்.

இந்நிலையில் ஜன கண மனவில் நடிக்க கேட்டதும் அவர் சம்மதித்துள்ளார். செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் டயானா எரப்பா. அவர் இதில் 2வது ஹீரோயினாக நடிக்கிறார். ரகுமான், எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஈரானிய நடிகை எல்னாஸ் நொரவ்சி இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

Related Stories: