கோண்டா: இடுப்பில் தான் ஊசி போடுவேன் எனக் கூறி இளம்பெண்ணிற்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த உத்தரபிரதேச மருத்துவரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் விசுனாபூர் பகுதியில் செயல்படும் கிளினிக்கிற்கு 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அங்கிருந்த மருத்துவர், அந்த பெண்ணுக்கு இடுப்பில் ஊசி போட வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தப் பெண் தனது கையில் ஊசி போடுமாறு கோரினார். இதனை ஏற்க மறுத்த மருத்துவர், அந்தப் பெண்ணை அங்கிருந்த பெஞ்சில் வலுக்கட்டாயமாக படுக்க வைத்து, அவரது இடுப்பில் போதை ஊசி போட்டுள்ளார். மயக்கமடைந்த அந்தப் பெண்ணை, அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்து திரும்பிய அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் கர்குபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து விசுனாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அஜ்மல் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி ஆகாஷ் தோமர் கூறுகையில்: போதைப்பொருள், பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அஜ்மல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தனியாக சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு போதை ஊசி போட்டு, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் சிலர் அஜ்மல் மீது புகார் அளித்துள்ளனர். அதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது. இதையறிந்த மக்கள் அந்த கிளினிக்கை முற்றுகையிட்டனர். உள்ளூர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்’ என்றார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிளினிக்கில் இருந்து, போதை ஊசி உட்பட தடை செய்யப்பட்ட மருந்துகளையும், ஹார்மோன் ஊசிகளையும் சுகாதாரத் துறையினர் மீட்டனர். ெதாடர்ந்து அந்த கிளினிக் மற்றும் அத்துடன் தொடர்புடைய மெடிக்கல் ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post உத்தரபிரதேசத்தில் இடுப்பில் தான் ஊசி போடுவேன் எனக்கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர் கைது appeared first on Dinakaran.