தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சார்பில்,  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை இல்லா நகரமாக மாற்ற  விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. தாம்பரம் பேருந்து நிலையம் அருகே, பேரணியை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமை வகித்தார். பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதி வரை மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஓட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர். பேரணியில்,  தாம்பரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சாமுவேல், சிவகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்….

The post தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: