ஜாக்டோ ஜியோ மாநாடு முதல்வருக்கு பேனர்

திருத்தணி: ஜாக்டோ ஜியோ மாநாட்டுக்கு வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேனர் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆசிரியர், அரசு உயர் மற்றும் அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஜாக்டோ ஜியோ அமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு வரும் 10ம் தேதி சனிக்கிழமை சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது.  இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி அவரை வரவேற்று திருத்தணி வருவாய் துறை சார்பில் மற்றும் அரசு உயர்வு சங்க சார்பில் மாவட்ட பொருளாளர் வெண்ணிலா, திருத்தணி வட்ட தலைவர் கணேஷ்குமார், செயலாளர் உதயகுமார், பொருளாளர்  ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், துணைத்தலைவர்கள் தாமோதரன், மணி,  இணைச் செயலாளர்கள் ஸ்டீபன் ராஜ், தாமஸ்  சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்  மணிவாசகம்,   சந்திர சேகர், வருவாய் ஆய்வாளர் தினேஷ் சாபிராம்  ஆகியோர் வரவேற்று விளம்பர பேனரை திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்….

The post ஜாக்டோ ஜியோ மாநாடு முதல்வருக்கு பேனர் appeared first on Dinakaran.

Related Stories: