லஞ்சம் பெற்ற மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 2006ல் காங்கயம் தெற்கு மின் வாரிய அலுவலகத்தில் மின் கட்டண டேரிப் மாற்றுவதற்காக விண்ணப்பித்தார். இதற்கு மின்வாரிய உதவி பொறியாளர் சக்திவேல் (52) என்பவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் பெற்றபோது கையும்  களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்….

The post லஞ்சம் பெற்ற மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: