பூதூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா; மரகதம் குமரவேல் எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: பூதூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப பள்ளி வளாகத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்.எல்.ஏ, மரகதம் குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சி.சுரேஷ் துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அப்பாதுரை, கார்த்திக், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில், அங்கன்வாடி குழந்தைகளுக்காக நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ள இந்த அங்கன்வாடி மைய கட்டிட கட்டுமான பணிகள் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post பூதூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா; மரகதம் குமரவேல் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: