சசி தரூருக்கு பிரான்ஸ் செவாலியர் விருது

திருவனந்தபுரம்: உலகம்  முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பிரான்ஸ் அரசு  உயரிய செவாலியர் விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. மறைந்த நடிகர் திலகம்  சிவாஜி கணேசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ்  எம்பி சசி தரூருக்கு செவாலியர் விருது கிடைத்து உள்ளது. பேச்சு மற்றும்  எழுத்துத் துறையில் பல சாதனைகளை படைத்ததற்காக இந்த விருது அவருக்கு  வழங்கப்படுகிறது. இது குறித்து சசி தரூர் கூறுகையில், ‘எனக்கு உயரிய செவாலியர் விருதை வழங்க  தீர்மானித்துள்ள பிரான்ஸ் அரசுக்கு நன்றி,’ னெ தெரிவித்தார். விருது வழங்கப்படும் தேதி இன்னும்  முடிவாகவில்லை….

The post சசி தரூருக்கு பிரான்ஸ் செவாலியர் விருது appeared first on Dinakaran.

Related Stories: