குறிஞ்சிப்பாடி தெற்குமேலூர் அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழா

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி வட்டம், தெற்குமேலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீஅங்காளம்மன் கோயில். இக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ கொடியேற்றம் கடந்த 10ம் தேதி காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு யாக பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் பூசாரி சிறப்பு பூஜைகளை நடத்தி கொடியேற்றினர்.

11ம் தேதி மேடைநாடகம், 12ம் தேதி உச்சிக்கப்பரை, 13ம் தேதி பண்டார வேடம், 14ம் தேதி ஐந்துமுகம், 16ம் தேதி இருளுமுகம், ரணம் ஒளிந்து வருதல் உள்ளிட்ட வேடங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். 17ம் தேதி திருக்கல்யாணமும், 18ம் தேதி இளவரசன்பட்டு, ஆண்டிக்குப்பம், ஆபத்தாரணபுரம், மேலிருப்பு, ஆத்திரிக்குப்பம் ஆகிய கிராமவாசிகள் உற்சவதாரர்கள் பங்களிப்புடன் ரதோற்சவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான மயான கொள்ளை விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: