நாகர்கோவில்: செண்பகராமன்புதூர் பத்ரகாளி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று காலையில் தீர்த்தாபிஷேகம், பால்குட ஊர்வலம் மற்றும் நேர்ச்சைகள் எடுத்து வருதல், மதியம் உச்சிகால வழிபாடு, தொடர்ந்து அன்னதானம், மாலையில் கும்பாபிஷேக தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், நள்ளிரவில் பத்தரகாளி அம்மனுக்கு காளி ஊட்டு, அலங்கார தீபாராதனை, பத்ரகாளி அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.