மாரியூர் சிவன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவ திருவிழா

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் வருடாந்திர தீர்த்தவாரி உற்சவ திருவிழா நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிற வள்ளியம்மன் கோயிலில் வருடாந்திர மார்கழி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலில் உற்சவ மூர்த்திக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பூவேந்திய நாதருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது.

மாலையில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் தேவஸ்தானம், மாரியூர் பிரதோஷ கமிட்டி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ஆன்மீக சொற்பொழிவு, பஜனைகள் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: