சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் வருடாந்திர தீர்த்தவாரி உற்சவ திருவிழா நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிற வள்ளியம்மன் கோயிலில் வருடாந்திர மார்கழி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலில் உற்சவ மூர்த்திக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பூவேந்திய நாதருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது.