ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடிய தேவா

சென்னை: இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய ஆல்பம் பாடல் ‘மாமாகுட்டிமா’ புரோமோ வெளியாகியுள்ளது. இந்த பாடலினை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா பாடியுள்ளார். லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான டாக்டர் மாலாகுமார் தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘முத்து முத்து கருவாயா’, ‘தாகம்தீர வானே இடிந்ததம்மா,’ ‘சண்டாளனே’, ‘கண்ணத்தொறந்ததும் சாமி’ ஆகியவை அஸ்மின் எழுதிய பாடல்களாகும். மேலும், சமீபத்தில் இலங்கையில் இருந்து வெளியாகி உலகெங்கும் டிரெண்ட் ஆன ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்’ பாடலும் இவர் எழுதியது தான்.

The post ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடிய தேவா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: