வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வாடிக்கையாளரிடம் ரூ. 25 ஆயிரம் அபேஸ்

பெரம்பூர்: ஓட்டேரி பட்டாளம் யாகூப் கார்டன் தெருவை சேர்ந்தகவுஸ் பாஷா (38), செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நான் எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுகிறேன். உங்களது வங்கி கணக்கில் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும். நான் அனுப்பும் லிங்க்கில் உங்கள் பான் கார்டு எண்ணை இணைத்து விடுங்கள்,’ என்று கூறியுள்ளார். அதன்படி, இணைத்த பிறகு இவருக்கு ஓடிபி எண் வந்துள்ளது. அதை அந்த நபரிடம் கவுஸ் பாஷா கூறியுள்ளார். அடுத்த நிமிடமே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதுகுறித்து கவுஸ் பாஷா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். …

The post வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வாடிக்கையாளரிடம் ரூ. 25 ஆயிரம் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: