3% அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: பொதுப்பணி, நீர்வளத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை(ம)நீர்வளத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.சகாயநாதன், மாநில பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.22 முதல் 31 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக வழங்க மார்ச் 31ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஒன்றிய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் போதெல்லாம், அதே தேதியில் அதே சதவீதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைபடியினை உயர்த்தி வழங்குவது என்பது தமிழக அரசின் நிலைபாடாகும். எனவே, ஒன்றிய அரசின் உத்தரவை பின்பற்றி 1.1.22 முதல் அகவிலைபடியை 34 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையையும் உடனடியாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post 3% அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: பொதுப்பணி, நீர்வளத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: