வெற்றிமாறன் கதையில் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் 2ம் பாகத்தில் நடித்துள்ளார், சூரி. இந்நிலையில் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் புதுப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடந்தது. இதை துரை.செந்தில் குமார் இயக்குகிறார்.

முக்கிய வேடங்களில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மைம் கோபி நடிக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ், கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி சார்பில் கே.குமார் தயாரிக்கிறார்.

The post வெற்றிமாறன் கதையில் சூரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: