திருச்சி ஆவின் பால் பண்ணையில் நள்ளிரவில் தீ விபத்து: பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். திருச்சி கொட்டப்பட்டு தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றிற்கு 4.70 லட்சம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் அங்கிருந்த பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதீத வெப்பம் காரணமாக வெடித்துச் சிதறி தீ பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த புத்தூஸ் என்ற ஒப்பந்த ஊழியர் உடல் முழுவதும் தீ காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.       …

The post திருச்சி ஆவின் பால் பண்ணையில் நள்ளிரவில் தீ விபத்து: பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: