4வது முறையாக இணைந்த ரவிதேஜா, கோபிசந்த் மலினேனி

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவிதேஜாவும், இயக்குனர் கோபிசந்த் மலினேனியும் தற்போது 4வது முறையாக இணைந்து உள்ளனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் தயாரிக்கின்றனர். கோபிசந்த் மலினேனியின் முந்தைய படங்களான ‘கிராக்’, ‘வீரசிம்ஹா ரெட்டி’ போல், சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது. தமன் இசை அமைக்கிறார். வித்தியாசமான கெட்டப்பில் ரவிதேஜா நடிக்கிறார்.

இதற்கு முன்பு கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ‘டான் சீனு’, ‘பலுபு’, ‘கிராக்’ ஆகிய படங்களில் ரவிதேஜா நடித்துள்ளார். 4வது முறையாக அவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பு போஸ்டரில், ஒரு கிராமத்தில் நிலவும் பயங்கர சூழ்நிலை இடம்பெற்றுள்ளது. அங்கு சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அபாய பலகை ஒன்றும் இருக்கிறது. இந்த போஸ்டரை ரவிதேஜா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

The post 4வது முறையாக இணைந்த ரவிதேஜா, கோபிசந்த் மலினேனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: