திரிபுராவில் ராஜினாமா 2 பாஜ எம்எல்ஏக்கள் காங்.கில் சேர திட்டம்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையின் பாஜவின் பலம் 35 ஆக இருந்து வந்தது. இந்நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் இரண்டு நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பாஜ எம்எல்ஏக்கள் ராய் பர்மான் மற்றும் சகா ஆகியோர் சபாநாயகர் ரத்தன் சக்ரவர்த்தியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர்கள் விலகினார்கள். இது குறித்து ராயம் பர்மான் கூறுகையில், ‘‘நாங்கள் இருவரும் டெல்லி செல்கிறோம். 12ம் தேதி திரும்பி வருவோம். கட்சியில் இருந்து விலகுவது குறித்து மாநில தலைவர் மாணிக் சகாவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்’’ என்றார். இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தததை அடுத்து சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 33 ஆக குறைந்துள்ளது. இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post திரிபுராவில் ராஜினாமா 2 பாஜ எம்எல்ஏக்கள் காங்.கில் சேர திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: