திரையரங்கு வாசல்களில் ஒட்டப்பட்டிருந்த ஆதிபுருஷ் போஸ்டர்களையும் கிழித்து வீசினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மும்பை காவல்துறையிடம் முறையிட்டார். அதையடுத்து அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மனோஜ் முன்டாஷிரிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது’ என்று கூறினர்.
The post ‘ஆதிபுருஷ்’ வசனகர்த்தாவுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்கியது போலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.