தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மலைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா?

 

வருசநாடு, ஜூலை 15: வருசநாட்டிலிருந்து தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் பிளவக்கல் மலைசாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றப்படுமா என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வருசநாட்டிலிருந்து, விருதுநகர் மாவட்டம் கிழவன் கோவில்-பிளவக்கல்லை இணைக்கும் வகையில் மலைச் சாலை அமைக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு உத்தேசிக்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் நிலை உள்ளது. இந்தப் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மலைப் பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

The post தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மலைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: