4 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் பாலக் லால்வானி

‘அப்பாயின்ட அம்மாயி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலக் லால்வானி. அதன்பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ‘குப்பத்து ராஜா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு ‘சிக்சர்’ படத்தில் நடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு ‘சினம்’ படத்தில் நடித்தார். தற்போது 4 வருடங்களுக்கு பிறகு ‘தலைநகரம் 2’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் சுந்தர்.சி ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுதவிர தற்போது ‘பார்ட்னர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான பாலக் லால்வானி 7 ஆண்டுகளில் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘பராஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். ‘தலைநகரம் 2’ படம் தமிழில் தனக்கு ரீ எண்ட்ரியை உருவாக்கித் தரும் என்று அவர் நம்புகிறார்.

The post 4 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் பாலக் லால்வானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: