இந்நிலையில், மகளின் காதல் விவகாரம் தெரிந்து பெற்றோர் கண்டித்துள்ளனர். பின்னர் இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து கடந்த 20ம் ேததி 17 தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இளம்பெண் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் தாயும் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அந்த இளம்பெண், காதலனிடம் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாகவும், தன்னை அழைத்துச்சென்று விடும்படியும் கூறியதாக தெரிகிறது. அதன்படி கன்னியாகுமரி வாலிபர் நேற்று முன்தினம் மதியம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இளம்பெண்ணின் தாய், கழிவறைக்கு சென்றிருந்த நேரத்தில் காதலன் வந்து அவரை அழைத்து சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்த தாய் மகளை காணாமல் பல இடங்களிலும் தேடியபோது, காதலனுடன் ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய், வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணையும், கடத்தியதாக கூறப்படும் கன்னியாகுமரி வாலிபரையும் தேடி வருகின்றனர்.
The post இன்ஸ்டாகிராம் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; 17 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற மாணவி: வேலூர் மருத்துவமனையில் இருந்து குமரி காதலனுடன் ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.
