தா.பழூர், ஜூன் 18: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துவாஞ்சேரி கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலுச்சாமி தலைமை வகித்த நிலையில், முன்னாள் மாவட்ட செயலாளர் உலகநாதன், அபிமன்னன் சுப்பிரமணி, தனசிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரெங்கநாதன், பாண்டுரங்கன், பாலகிருஷ்ணன், தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளராக ரங்கநாதன், துணைச் செயலாளராக வேலுச்சாமி, பொருளாளராக பாண்டுரங்கன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்போது, சிதைந்து கிடக்கும் மதிக்கொட்டான் ஓடையை சீர் செய்து தண்ணீர் தேக்கி வைத்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், முத்துவாஞ்சேரியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்,மரு தையாற்றின் குறுக்கே வைப்பூர் செல்லும் பாதையில் பாலம் அமைக்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தில் 40, 50 பேர் என்ற நிலையை மாற்றி நூறு நாள் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நாள்தோறும் வேலை வழங்கி, முழு சம்பளத்தை கொடுக்க வேண்டும், முத்துவாஞ்சேரில் பேருந்து வந்து செல்ல இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.
The post முத்துவாஞ்சேரி இ.கம்யூ.கட்சியின் கிளை கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.
