இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான வழிமுறைகளில் உள்ள சில விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் நிறுவப்பட்ட பகுதியிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள தூரத்திற்குள் எந்தவொரு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் இருந்தாலும் கடைகள் திறப்பதற்கான விதிகள் பொருந்தாது. அதேபோல் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்தால் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அதில் வழங்கப்பட்ட தகுதிகள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
The post புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.
