தர்மபுரி, மே 21: பாலக்ேகாடு அடுத்த கன்னுகாரன்பட்டியை சேர்ந்தவர் பழனி(56). இவர் தர்மபுரி – பென்னாகரம் சாலை லாரி பார்க்கிங் பகுதியில், பழைய கார்களை வாங்கி, அவற்றை உடைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் நெருக்கடியால் மனமுடைந்த பழனி நேற்று முன்தினம் பட்டறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த, தர்மபுரி டவுன் போலீசார், பழனியின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வியாபாரி தூக்கிட்டு தற்ெகாலை appeared first on Dinakaran.
