மருத்துவமனைகள், மத்திய சிறைச்சாலையில் மட்டும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் கதவு, ஜன்னல்களை பூட்டி வைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அத்துடன் நிர்வாக காரணங்களுக்காக பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பாக்.-ன் தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்க, இந்திய ராணுவத்துடன் காவல்துறையும் இணைந்து போராட ஆணையிடப்பட்டுள்ளது. எந்த ஒரு மருத்துவ அவசர நிலையையும் கையாள 24 மணிநேரமும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ள பஞ்சாப் அரசு, பதான்கோட், அமிர்தசரஸ், குருதாஸ்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து பொது நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளது பஞ்சாப் அரசு. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் கொடி ஏற்ற, இறக்கத்தை ஒட்டிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
The post ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!… குருதாஸ்பூரில் 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்; போலீசாரின் விடுமுறை ரத்து : பஞ்சாப் அரசு அதிரடி appeared first on Dinakaran.
