அப்போது, பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகள், இந்த மகத்தான திட்டமான “மகளிர் விடியல் பயணம் திட்டம்” மூலம் நாங்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருவதால், நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிகிறது என்றும், இதனால், மாதம் 2000 ரூபாய் வரையில் சேமித்து வைக்க முடிகிறது என்றும், அந்த சேமிப்புத் தொகையிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கான படிப்பு செலவுகளுக்கும், மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதையும் தெரிவித்து, இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கும் நான்காண்டு முடிவடைந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குவதையொட்டி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்ற தங்களது விரும்பத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.
முதல்வர், விடியல் பயணம் திட்டத்தில் மூலம் பயன்பெறும் பெண்களுக்காக முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பேருந்து பயணத்தை தொடர வேண்டும் என்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post மகளிர் விடியல் பயண திட்டம் குறித்து மாநகர பஸ் பயணிகளிடம் முதல்வர் உரையாடல்: நல்லாட்சி தொடர வேண்டும் என வாழ்த்து appeared first on Dinakaran.
