இந்த நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரம் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இரு நாடுகள் இடையிலான போர் பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்திய பாகிஸ்தான் நாடுகள் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி, இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து அந்தோணியோ குட்டேரஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும், “இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் உச்ச பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுவது கவலை அளிக்கிறது,”என்றார்.
The post இந்திய, பாகிஸ்தான் நாடுகள் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஐ.நா. வேண்டுகோள் appeared first on Dinakaran.
