இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ” பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும். நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளார். இதே போல், அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,” பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தை துல்லியமாகச் செயல்படுத்திய நம் ராணுவத்தைப் பாராட்டுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டு மக்களை காப்பதற்கான நமது நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
The post பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!! appeared first on Dinakaran.
