இந்நிலையில் சுபாஷின் வீடு, கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொண்டாபூர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் மகன், மகள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதே அறையில் சுபாஷ் தூக்கில் சடலமாக கிடந்தார். சடலத்தின் அருகே சுபாஷ் எழுதியதாக கூறப்படும் கடிதம் இருந்தது.
அதில், மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி பிரிந்துசென்றதால் வேதனை அடைந்த நான், எனது குழந்தைகளுடன் இறந்துவிடுகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மகன், மகளை கொன்றுவிட்டு லேப்-டெக்னிஷியன் தற்கொலை appeared first on Dinakaran.
