மதுரை: உசிலம்பட்டி அல்லிகுண்டம் கிராம ஓடை ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அல்லிகுண்டத்தில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த சகாதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது.
The post மதுரையில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
