உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு

கீவ்: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்துள்ளார்.

இந்த நிலையில், 2ம் உலக போரின் 80ம் ஆண்டு தினத்தையொட்டி வரும் மே 8 முதல் 10ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். போர் நிறுத்தம் மே 8ம் தேதி நள்ளிரவில் இருந்து 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

The post உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: