ஊத்தங்கரை, ஏப்.24: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த குன்னத்தூர் அருகேயுள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(37). செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவர் காரப்பட்டு இந்திரா நகரை சேர்ந்த சதீஷ்(38) என்பவரிடம், ரூ.2 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். கடந்த 14ம் தேதி சதீஷ் சுப்பிரமணியிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, சுப்பிரமணி காலஅவகாசம் கேட்டதாக தெரிகிறது. இதனால் தகாத வார்த்தைகளால் திட்டி, சுப்பிரமணியை சதீஷ் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ மோகன் வழக்குப்பதிவு செய்து, சதீஷை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post கடனை தராததால் தொழிலாளியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.
