மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது

ஊத்தங்கரை, ஏப்.24: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸ் எஸ்ஐ நித்யா மற்றும் போலீசார், அத்திப்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: