பெய்ஜிங்: சீனாவில் பாலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சீனாவின் வடகிழக்கு ஷன்யீ மாவட்டத்தில் நேற்று அதிகாலை சாபாய் நதியின் மீது கட்டப்பட்டு இருந்த பாலத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். இதனிடையே பாலம் இடிந்து விழுந்தது.
The post தீ விபத்தால் இடிந்து விழுந்த சீன பாலம் appeared first on Dinakaran.