கழிவுநீரால் துர்நாற்றம்: மக்கள் அவதி

திருப்பூர், ஏப்.18: திருப்பூர் மாநகராட்சி சூசையாபுரம் மிலிட்டரி காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பொது கழிவறை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு செப்டிக் டேங்க் வசதி முழுவதுமாக பயன்படுத்தப்படாததன் காரணமாக கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதி சாக்கடை கால்வாயில் திறந்து விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாது தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதால் செப்டிக் டேங்கில் கழிவுநீரை திறந்து விடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கழிவுநீரால் துர்நாற்றம்: மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: