இந்தநிலையில், சில நாட்களாக சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 3மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே சிறுமிக்கு திடீரென கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். இதுசம்பந்தமாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து கோகுலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post 16வயது சிறுமி கர்ப்பம் விவகாரம்: மாமா மகன் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.