16வயது சிறுமி கர்ப்பம் விவகாரம்: மாமா மகன் மீது வழக்கு பதிவு

பெரம்பூர்: 16 வயது சிறுமி கர்ப்பமானது தொடர்பாக அவரது மாமா மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 36 வயது பெண், தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் சிறுமி 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில், சிறுமியை தனது அத்தை மகனுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்கனவே பெரியவர்கள் முடிவு செய்து பேசி வைத்துள்ளனர். இதன்பிறகு கடந்த ஒரு வருடமாக அத்தை மகன் கோகுலுடன் அடிக்கடி சிறுமியுடன் பேசியதுடன் அவருடன் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில், சில நாட்களாக சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 3மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே சிறுமிக்கு திடீரென கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். இதுசம்பந்தமாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து கோகுலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 16வயது சிறுமி கர்ப்பம் விவகாரம்: மாமா மகன் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: